Tuesday, April 30, 2019

தனிநபர் ஜனநாயகம்


தனிமனிதர்களை முன்னிறுத்தி நடத்தப்படும் அரசியல் ஜனநாஜயகத்திற்கு உகத்ததென படவில்லை. இது போன்ற முன்னிறுத்தல்கள், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டுப்போடுவது மட்டுமே தங்களின் கடமை பின் நடக்கப்போகும் பிற அனைத்தையும் அவர் பார்த்துக்கொள்வார் என்றும், அவர் என் இனத்தின், மதத்தின், சாதியின், மொழியின் தலைவர் எனவும், அவர் நிர்வாகத்தில் தோற்பதும், சொதப்புவதும், ஜனநாயக அமைப்பின் குறை எனவும், சமரச போக்கினை கடைபிடிக்க முற்படும் போது அவரை திராணியற்றவர் எனவும் பெரும்பான்மை மக்களை நம்ப வைக்கின்றது. 

இதன் விளைவாகத்தான் இன்றுநான் தான் உங்களின் காவலன், என்னிடத்தில் சமரசத்திற்கு எல்லாம் வேலையே இல்லைஎன்றும், “எனக்கு எல்லாம் தெரியும் நீ மொதல்ல ஓட்டுப்போடு, உனக்கு என்ன செய்யணும்கிறத நான் பார்த்துக்கொள்கிறேன்என்றும் பேசும் தலைவர்கள் வலுப்பெறுவதையும் பார்கின்றேன்.

மக்களுடன் உரையாடுவதை தவிர்த்து, அவர்களின் பிரச்சனைகளின் வேரினை அறியாமல் பீடத்தில் அமர்ந்து கொண்டு அவர்களை சதா வழி நடத்தவிரும்பும் ஆதிக்கவாத தலைவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

ஜனநாயகத்தின் முக்கிய விழுமியங்களான சமரசம்,  சகிப்புத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் அகிம்சை போன்றவை தனது மதிப்பினை இழந்து வருகின்றன. விழுமியங்களை இழந்து வரும் ஒரு சித்தாந்தம் அதன் உண்மையான பாதையில் இருந்து விலகி தன்னைத்தான அழித்துக்கொள்ளும் பாதையை நோக்கி நகர்கின்றது.

Wednesday, November 21, 2018

கஜா என்ற ஆசிரியரும், அவர் காலத்தே கற்றுக்கொடுத்த பாடமும்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களையும், அவர்களுக்கு கிடைக்கும் உதவிகளையும் கொச்சைப்படுத்தும் எண்ணத்தில் இதை எழுதவில்லை.

மழை மறைவு பிரதேசமான தமிழகத்திற்கு, வட கிழக்குப் பருவமழை என்பது ஒரு வரம். இயற்கையாக அமைந்த இந்த நிகழ்வில், சமயங்களில்  குறைந்த மழையையும், சமயங்களில் புயல் போன்ற காரணங்களால் பெரு மழையையும் பெறுகிறோம். காலங்காலமாக நடந்து வரும் இந்த இயற்கை நிகழ்வை, தற்காலத்தில் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு முன்கூட்டியே கணிக்க முடிகிறது. ஏன், உருவாகும் புயல்களுக்கு பெயர்வைத்துப் பார்க்கும் அளவுக்கு நேரம் இருக்கிறது. 1968-ம் ஆண்டு வெளிவந்த தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் ஒரு காட்சியில் நாகேஷ் இப்படி சொல்லுவதாக ஒரு காட்சி வரும் "நாகப்பட்டிணத்துல புயல் வருதா? அதுதான் வருசா வருஷம் வருதே. அதுக்கென்ன".

தமிழக கிழக்குக் கடற்கரை, குறிப்பாக காவேரி டெல்டா பகுதியை புயல் தாக்குவது அரிதான நிகழ்வு அல்ல. இந்த வருடம் கஜா புயல். அடுத்த ஆண்டு? இந்த நிலையில், அப்பகுதி மக்கள் இத்தகைய கடினமான இயற்கை சூழலை எதிர்கொள்ள சுயமாகவோ அல்லது அரசாங்கத்தாலோ பயிற்றுவிக்கப்பட்டு உள்ளதாக தெரியவில்லை.

ஏன் ஆடு, மாடுகள் மரம் விழுந்து செத்துக்கிடக்கிறன? சுனாமி மாதிரியான திடீர் இயற்கைப்பேரிடர் இல்லை இந்தப் புயல். கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கு முன்பே கணிக்கப்பட்டு மக்களிடம் அரசு, பொது மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக புயல் எச்சரிக்கை தொடர்பான தகவல்கள் கொண்டு சேர்க்கப்பட்டுவிட்டன. இருப்பினும் அவர்களால் தங்கள் வாழ்வாதரமான ஆடு, மாடுகளைக்கூட பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. கால்நடைகளை இயற்கைப் பேரிடரின் போது பாதுகாக்கத் தேவையான இட அமைப்பு இல்லாமல் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒவ்வொரு கிராம மக்களும் குறைந்த பட்சம் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒன்று கூடி புயல் தொடர்பான தகவல்களை பொது வெளியில் விவாதித்து உடனடியாக நடவடிக்கைகளை தொடங்கியிருக்க வேண்டும். குறைந்த பட்சம், தேவையான உணவுப் பொருட்களை சேமித்தல் (எறும்புகள் செய்வதைப் போல), நீர் தேக்கத் தொட்டியில் முழு கொள்ளளவுக்கு நீரை நிரப்பி வைத்துக் கொள்ளுதல், முடிந்த வகைகளில் குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுதல், கால்நடைகளை ஒன்றாக ஒரு பாதுகாப்பான இடத்தில் அடைத்து வைத்தல் என இன்னும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுக்க நிறைய நேரம் இருந்தது. கும்பல் மனப்பான்மையை எளிதில் அடையும் நமக்கு ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு குழுவாக இணைவது அவ்வளவு எளிமையாகக் கைகூடுவது இல்லை.

புயலுக்குப் பின், தற்போது கிடைக்கும் உதவி பாராட்டத்தக்கதாக இருந்தாலும் கூட அது யானைப் பசிக்கு சோளப்பொரி தான். மக்களின் ஆக்கப்பூர்வமான முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் தான் சிறப்பாக உதவக் கூடியனவையே தவிர, அரசோ அல்லது பிறரோ தரும் புயலுக்கு முன் மற்றும் பின்னான தற்காலிக உதவிகள் அல்ல என்று நினைக்கிறேன்.

அரசாங்கம் என்ற இந்த அமைப்புகள் எல்லாம் உருவாவதற்கு முன், நம் பிரச்சனைகளை நாம் தானே கவனித்துக் கொண்டோம்? இங்கு புதிதாக சிந்தித்து செயல்பட பெரிதாக ஒன்றும் இல்லை. காலம் காலமாக நாம் எப்படி நமக்காக இணைந்து செயல்பட்டோமோ, அந்த உணர்வை மறு ஆக்கம் செய்து நடைமுறைப்படுத்தினால் போதும். அதற்கான காரணமும், அவசியமும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது ஏற்பட்டு இருக்கிறது.

இயற்கை பேரிடருக்குப் பின்பு கும்பலாக சேர்ந்து அரசைக் குறைகூறுவதால் பெரிதாக ஒன்றும் மாறிவிடாது. இத்தகைய பெரும் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொண்டு குறுகிய காலத்தில் மீள் உருவாக்கம் செய்யம் அளவிற்கு நம் அரசாங்கங்களிடம் தொழில் நுட்பமும், வசதியும் இல்லை என்பதை உணர வேண்டும். முதலில் நாம் ஒன்றிணைத்து குழுவாக இயங்கி முடிந்த வரைக்கும் சேதாரங்களைக் குறைக்கப் பாடுபடவேண்டும். பின் அரசாங்கம் வந்து அவர்களின் வேலையை செய்யும்.

பொது வழிச் சாலைகளை மறிக்கலாம். அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் திட்டித் திருப்பி அனுப்பலாம். அங்கே அடித்து உடைக்கப்பட்ட இன்னோவா கார் அமைச்சரின் சொந்தக் கார் அல்ல. அது பொது சொத்து. நம் சொத்து. இந்த உணர்வு ஏற்படும் நாள் தான் நம் நாள்.

பி.கு: இது என் சொந்த கருத்து. இதற்கான மறுப்பு மற்றும் எதிர்வினைகளை பின்னூட்டமிடவும். தவறு இருப்பின் திருத்திக் கொள்கிறேன்.

நன்றி!
தினேஷ் ராஜு

Sunday, August 16, 2015

6 நிமிட குறும்படத்தில் சுதந்திரத்தின் மகத்துவம் - போலிப்பெருமிதம் ??

இரு நாட்களுக்கு முன்பு தமிழ் இந்துவில் "6 நிமிட குறும்படத்தில் சுதந்திரத்தின் மகத்துவம்" என்ற தலைப்பிட்ட ஒரு காணொளிப்பதிவைக் கண்டேன். அதிலே 'நம் இதயத்துக்கு பக்கத்தில்'. ஆனால், என்றாவது யோசித்திருக்கிறோமா, சுதந்திரம் கிடைக்காமலே போயிருந்தால் என்னவாகியிருக்கும். இன்னமும் ஆங்கிலேயரிடமே கட்டுண்டு இருந்திருந்தால் நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்று?" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் ஈர்க்கப்பட்டு அதைப்பார்த்தேன்.

ஓர் இரவில், இருசக்கர வாகனத்தில் கணவருடன் பயணத்துக் கொண்டிருக்கிறாள் ஒரு பெண். திடீரென  ஒரு விபத்து ஏற்படுகிறது. அருகே இருக்கும் நட்சத்திர ஓட்டலுக்குள் மனைவியை தூக்கிக் கொண்டு செல்கிறார் அந்தக் கணவர். அங்கே உணவு அருந்திக்கொண்டு இருந்த பிரிட்டஷ் மேல்வர்கத்தினர் அவர்களை காட்டுமிராண்டித்தனமாக நடத்தி வெளியே தூக்கி எறிகின்றனர். அங்கே ஒரு பலகையில் "DOGS AND INDIANS NOT ALLOWED" என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. பிற்பாடு, சுதந்திரம் பெற்ற இந்தியாவில் அவர்கள் உண்ணுவதற்கு அதே  நட்சத்திர ஓட்டலுக்கு செல்லும் போது அவர்கள் அன்புடன் மிகவும் மரியாதையாக நடத்தப்படுவதாக முடிகிறது. இதை முதலில் பார்த்தவுடன் நானும் அப்படியே மெய்சிலிர்த்து என் தேசத்தில் சுதந்திரத்தின் மதிப்பை உணர்ந்தவனாய் பெருமைப் பட்டுக்கொண்டேன்.

இதுப் போலிப் பெருமிதம் அல்லவா? இதே சுதந்திர நாட்டில் ஒரு பெரிய நட்சத்திர உணவு விடுதியில் ஒரு ஏழைக்கு இந்த மரியாதை கிடைக்குமா? விபத்தில் காயம் பட்ட  ஒரு சாமானிய மனிதனுக்கும் ஓடோடி வந்து உதவுவார்களா?

நாம் ஏன் உண்மைகளை மறந்தோ அல்லது மறைத்தோ போலிப்பெருமிதங்களைத் தேடிக்கொள்கிறோம். வரலாற்றின் பாதையில் பயணித்து அறிய யாருக்கும் ஆர்வமில்லை. யாரவது இப்படி ஒரு வீடியோவை எடுத்தால் அப்படியே சிலாகித்துவிட்டு ஒரு லைக் போட்டுவிட்டு ஒரு ஷேர் செய்துவிட்டு கடந்து போவதோடு கடமை முடிந்து விடுகிறது. 

Wednesday, July 13, 2011

என் ஊர்: திருச்செங்கோடு

''வண்டி ஓட்டத் தெரியாத பெண்கள் இல்லை!''


பெருமாள் முருகன்... மண் மணக்கும் எழுத்துக் காரர். 'காலச்சுவடு’ இலக்கிய இதழ் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிப்பவர். நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

___________________________________________________________________________________________________________________


'கொடிமாடச் செங்குன்று’ என்று பக்தி இலக்கியங்கள் குறிப்பிடும் கூட்டப்பள்ளி கிராமம்தான் என் சொந்த ஊர். இது திருச்செங்கோட்டை ஒட்டி இருக்கிறது. இன்று அது நக ரம் ஆகிவிட்டது. அர்த்தநாரீஸ்வரர், செங் கோட்டு வேலவர் ஆகிய கடவுள்கள் குடி கொண்டு இருக்கும் செந்நிற மலை திருச்செங் கோடு. மலை ஏற முடியாதவர்களுக்காக கீழே நிலத்தமர்ந்தான் கோயில் என்று சொல்லப்படும் கைலாசநாதர் கோயிலும் உண்டு.


கோயிலால் ஊர் அறியப்பட்டாலும், ஊரின் வளர்ச்சிக்குக் காரணம் தொழில் வளமும் மக்களின் கடின உழைப்புமே!

ரிக் வண்டித் தொழில் (போர்வெல் போடு வது), லாரி, விசைத்தறி எனக் குறுகிய காலத்தில் விஸ்வரூபம் எடுத்து, நாடு முழுவதும் அறியப் படும் நகரமாகிவிட்டது என் ஊர். போர்வெல் போடுவதற்காகச் செல்லும் ஆண்கள் மாதக் கணக்கில் வீட்டுப் பக்கம் எட்டிப் பார்க்க மாட் டார்கள். அதனால், குடும்பத்தைத் தனியாகவே நடத்தும் அளவுக்கு உரம் பெற்றவர்கள் இங்கு இருக்கும் பெண்கள். இரு சக்கர வாகனம் ஓட் டத் தெரியாத பெண்களே இங்கு கிடையாது. ஏன்? கன்டெய்னர் லாரி ஓட்டும் பெண்கள்கூட இங்கு உண்டு. தரமான கல்வி வழங்குவதில் இன்று தமிழகத்திலேயே முன்னிலையில் இருக்கிறது திருச்செங்கோடு. இங்கு இருக்கும் தனியார் கல்வி நிறுவனங்களில் வெளியூர்களில் இருந்து வரும் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கிப் படிக்கிறார்கள். மாநில அளவிலான மதிப்பெண்களில் முதல் பத்து இடங்களில் ஐந்தைத் தட்டிச் செல்வதும் இவர்களே!

பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது செவ்வாய் சந்தை. இன்று நகரின் வளர்ச்சி, சந்தையை முடக்கிவிட்டது. ஆனாலும், ஆட்டுச் சந்தையின் மவுசு மட்டும் மறையவில்லை. திங்கள் கிழமை மாலையில் இருந்தே ஆட்டு வியாபாரிகள் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்து விடுவார்கள். செவ்வாய்ப் பொழுது சாயும் வரை ஆடுகளின் 'ம்மேமே’ சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். மறுநாள் விடியற்காலை சுற்றுவட்டார விவசாயிகள் அங்கு குவிந்துகிடக்கும் ஆட்டுப் புழுக்கைகளை சேக ரித்துச் செல்வார்கள்.

அம்மன் குளம், சின்னத் தெப்பக்குளம், பெரிய தெப்பக்குளம் ஆகிய மூன்று குளங்கள்தான் திருச்செங் கோட்டின் நீர் ஆதாரமாக இருந்தன. இன்று, அம்மன் குளம் பேருந்து நிலையம் ஆகிவிட்டது. சின்ன தெப்பக் குளம் வணிக வளாகம் ஆகிவிட்டது. பெரிய தெப்பக் குளம் உருக்குலைந்துவிட்டது. திருச்செங்கோடு மலை யின் கிழக்குப் பகுதியில் மலார் குட்டை என்ற நீர்நிலை இருக்கிறது. மக்கள் மலையேறிச் சென்று தண்ணீர் பிடித்து வருவார்கள். இந்தத் தண்ணீர் சிறுவாணித் தண்ணீரைவிட சுவையானது.

ஊரின் மிகப் பெரிய விழா, வைகாசி விசாகத் திருவிழா. மொத்தம் 14 நாட்கள் ஊர் களை கட்டும். சுற்று வட்டாரக் கிராமங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் குவிந்துவிடுவார்கள். அந்த நாட்களில் திருச்செங்கோட்டின் அனைத்து வீடுகளிலும் புட்டும் கூட்டாஞ்சோறும் கமகமக்கும். வழிப்போக்கர்கள் ஆரம்பித்து விருந்தினர் வரை, யார் சென்றாலும் புட்டு சாப்பிடலாம்.
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் திருச்செங்கோடு இருந்தபோது சுற்றுவட்டார மாவட்டங்களில் எங்குமே அச்சகம் கிடையாது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே முதல்முறை யாக இங்குதான் சுப்ராய கவுண்டர் பிரஸ் தொடங்கப்பட்டது. தி.அ.முத்துசாமி கோனார் என்கிற முதுபெரும் தமிழ் அறிஞர் அந்த அச்ச கத்தின் மூலம் பல இலக்கிய நூல்களை வெளியிட்டு உள்ளார். 19-ம் நூற்றாண்டிலேயே திருச்செங்கோட்டில் அவர், 'விவேக திவாகரன்’ என்ற பத்திரிகையையும் நடத்தினார்.

இந்திய விடுதலைக்கு முன்பு சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராகப் பதவி வகித்த டாக்டர் சுப்ராயன், எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் குமாரமங்கலத்தைச் சேர்ந்த ஜமீன்தார். அவருக்குப் பிறகு அரசியலில் தூய் மையைக் கடைப்பிடித்த மோகன் குமார மங்கலம், ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகி யோரும் இம் மண்ணின் மைந்தர்களே!
வரலாற்றுச் சிறப்பையும், நவீன வளர்ச்சியையும், ஒரு சேரப் பெற்றிருக்கும் திருச்செங் கோடு, நான் புரண்டு விளையாடிய மண். என் உயிரோடு கலந்து இருக்கும் ஊர். அதனால்தான் என் படைப்புகளின் களம் திருச்செங்கோட்டைத் தாண்டுவதே இல்லை!''




Saturday, February 27, 2010

தேசிய விருது பெற்ற குறும்படம் - கர்ணமோட்சம்



கதை, உரையாடல்: எஸ். ராமகிருஷ்ணன்
இசை : ரா.  பிரபாகர்
திரைகதை, இயக்கம் : ச. முரளிமனோகர்
ஒளிப்பதிவு: ஜி. சிவராமன்

 

Wednesday, February 17, 2010

Excel Shortcuts

You can download Excel Shortcuts here!